Saturday, March 27, 2010

வள்ளலாரின் வாழ்வில்…



அருட்பெருஞ் ஜோதி; அருட்பெருஞ் ஜோதிதனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் ஜோதி"
என்ற மகா மந்திரத்தை உலகம் உய்ய அருளிய மாண்பாளரின் மகா அவதார தினம். கருவிலே திருவுடையவராய்த் தோன்றிய இந்த மகாபுருஷர் துறவி, சித்தர், யோகி, ஞானி என எல்லா நிலைகளையும் கடந்து தன்னுடலையே ஒளியுடம்பாக ஆக்கிக் கொண்டு இறைவனோடு இரண்டறக் கலந்தவர்.
சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் இராமையாப் பிள்ளை – சின்னம்மை தம்பதியினருக்கு 5-10-1823ல் மகவாகத் தோன்றியவர் ஸ்ரீ ராமலிங்க அடிகள். தந்தை இளம் வயதில் இறந்ததால் சகோதரர் சபாபதிப் பிள்ளையின் ஆதரவில் சென்னையில் வந்து வசித்தார். இளமையிலேயே கருவிலே திருவுடையவராக விளங்கிய குழந்தை வளர வளர தெய்வக் குழந்தையாக பரிணமித்தது. தெய்வத்தின் அருள் பெற்றதாக வளர்ந்தது. பள்ளி செல்லும் வருவத்திலேயே அவருக்கு ஞானம் முகிழ்த்தது. ஓதாது அனைத்தையும் உணர்ந்து கொண்ட மெய்ஞ் ஞானக் குழந்தையாய் வளர்ந்தது.
சத்ய ஞான சப

சென்னையின்பொய்மை வாழ்க்கை கண்டு அஞ்சிய வள்ளலார் சில வருடங்களில் சென்னையை விட்டு நீங்கி மருதூர், கடலூர், வடலூர் போன்ற இடங்களுக்குச் சென்று தங்க ஆரம்பித்தார். இறைவனின் மீது ’திருவருட்பா’ என்னும் தெய்வீகப் பாமாலைகளைப் புனைந்தார். வடலூரில் சமரச சன்மார்க்கச் சங்கத்தையும், சத்தியத் தருமச் சாலையையும் நிறுவினார்.
"வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்டமரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்தஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோஇதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ?"
என்றெல்லாம் ஏழைகளின் நிலை கண்டு இரங்கினார். எல்லா மக்களையும் சமரச சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து உய்யுமாறு அழைத்தார்.
வள்ளலார் மறைந்த அற

மறு நாள் பொழுது புலர்ந்து, பணியாளர்கள் வெளியே சென்று பார்த்த பொழுது மூன்று வண்டிகள் நின்று கொண்டிருந்தன. அதில் முழுவதும் மூட்டை மூட்டையாய் அரிசிகள், இன்ன பிற உணவுச் சாமான்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
பணியாளர்கள் ஆச்சர்யத்துடன் அதனைக் கொண்டு வந்தவரிடம் கேட்ட பொழுது, அவர், தான் பக்கத்தில் உள்ள திருத்துறையூரில் இருந்து வருதாகவும், முந்தைய நாள், அடிகளார் தன் கனவில் வந்து அரிசி முதலிய உணவுப் பொருட்கள் வேண்டுமென்று கேட்டதாகவும், அவ்வாறே அவர் கனவில் இட்ட கட்டளைப்படியே தான் அங்கு அந்தப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பதாகவும் பணிவுடன் தெரிவித்தார்.
அடிகளாரின் அற்புத ஆற்றலை எண்ணி ஆச்சரியப்பட்டனர் பணியாளர்கள்.

ஜோதி தரிசனம

ஒருமுறை சில பக்தர்கள் ஒரு புகைப்படக்காரரை சென்னையிலிருந்து அழைத்துவந்தனர். அவர்களின் நோக்கம் எப்படியாவது வள்ளலாரைப் புகைப்படம் பிடித்து, அதனைத் தாங்கள் வைத்து வழிபட வேண்டும் என்பதே. வள்ளலார் இதற்கு உடன்படாத பொழுதும் அவர்கள் தங்கள் முயற்சியில் தளராது, அவரைப் பல முறை படம் பிடித்தனர். ஆனால் அந்தப் புகைப்படத்தில் வள்ளலாரின் வெண்மையான ஆடை மட்டுமே விழுந்திருந்தது. வள்ளலாரின் உருவம் விழவில்லை. பல முறை முயற்சி செய்தும் இதே நிலை தான். இறுதியில் அன்பர்கள் வள்ளலாரைப் புகைப்படம் எடுக்கும் முயற்சியைக் கைவிட்டனர். அந்த அளவிற்கு ஒளியுடல் பெற்றவராக வள்ளலார் திகழ்ந்தார்.
இவ்வாறு உலக உயிர்களுக்காக இரங்கி, வாடிய பயிர்களுக்காக வாடி தன்னலம் கருதாது தொண்டு புரிந்து வந்தார் அடிகளார். ஆனால் மக்கள் யாரும் இவர் தம் பெருமையை முழுமையாக உணரவில்லை. அவர் தம் கொள்கைகளையும் சரியாகப் பின்பற்றவில்லை. அது கண்டு வள்ளலார் வருந்தினார். ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை. கட்டி விட்டோம்’ என்று அந்த வருத்தம் வாக்காக வெளிப்பட்டது.

ஸ்ரீ முக ஆண்டு. (1874) தை மாதம் 19 ஆம் நாள் வெள்ளிக் கிழமை. ஜனவரி மாதம் முப்பதாம் தேதி. இரவு மணி பனிரெண்டு. வள்ளலார் அன்பர்களை அழைத்தார். "நான் உள்ளே பத்து பதினைந்து தினங்கள் இருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருக்கால் பார்க்க நேர்ந்து பார்த்தால், யாருக்கும் தோன்றாது வெறும் வீடாகத் தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார்" என்று அறிவித்தார். பின்…" பிச்சுலக மெச்சப் பிதற்றுகின்ற பேதையனேன்இச்சையெலாம் எய்த விசைத்தருளிச் செய்தனையேஅச்சமெலாந் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்நிச்சலும் பேரானந்த நித்திரை செய்கின்றேனே!"
- என்று பாடிக்கொண்டே, சித்தி வளாகத் திருமாளிகைக்குள் நுழைந்தார். கதவைச் சாத்திக் கொண்டார். அதன் பின் அன்பர்கள் அனைவரும் அடிகளாரின் உத்தரவுப்படி அறைக் கதவைச் சில நாட்கள் திறக்காமலே இருந்தனர். பின் அரசாங்கத்தின் உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியாளர், தாசில்தார், காவல் துறைத் தலைவர் ஆகியோர் பூட்டியிருந்த கதவைத் திறக்க ஏற்பாடு செய்தனர். உள்ளே வெறும் வெற்றிடம் மட்டுமே இருந்தது. வள்ளலாரைக் காணவில்லை. பூட்டிய கதவு பூட்டிய படி இருக்க வள்ளலார் மாயமாக மறைந்து விட்டார்.

வள்ளலார் தமது உடலை ‘ஞான தேகம் ஆக்கிக் கொண்டு காற்றோடு காற்றாய், இயற்கையோடு இயற்கையாய்க் கலந்து விட்டார். தன் உடலை ஒளியுடல் ஆக்கிக் கொண்டு, எல்லாம் வல்ல பேரருள் ஒளியொடு, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரோடு, ஒன்றோடு, ஒன்றாகக் கலந்து விட்டார்.
வள்ளலார் மறைந்திருக்கலாம். ஆனால் அவரது சமரச சன்மார்க்க, சமத்துவ, சமுதாயக் கொள்கைகள் மறைந்துவிடவில்லை. அவை இன்னமும் தனது கருத்தினை, சீர்திருத்தக் கொள்கைகளை இந்த உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.
எளியோரை வாழ்விக்க வந்த வள்ளலின் பாதம் பணிவோம். வளம் பல பெறுவோம்.

Thursday, March 25, 2010

பதினெட்டு சித்தர்கள்



சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை உடையவர் என்றும் பொருள்.சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும்.

இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர்.இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம். சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன.அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே.அதே போன்று இன்று உலக மக்கள் திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கும் அந்த ஸ்தலம் உலக பிரசித்தி பெற்றதற்கும் காரணம் அங்குள்ள கொங்கணவர் என்ற சித்தரே.அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள

அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம்

இதோதிருமூலர் - சிதம்பரம்இராமதேவர் - அழகர்மலைஅகஸ்தியர் - திருவனந்தபுரம்கொங்கணர் - திருப்பதிகமலமுனி - திருவாரூர்சட்டமுனி - திருவரங்கம்கரூவூரார் - கரூர்சுந்தரனார் - மதுரைவான்மீகர் - எட்டிக்குடிநந்திதேவர் - காசிபாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்போகர் - பழனிமச்சமுனி - திருப்பரங்குன்றம்பதஞ்சலி - இராமேஸ்வரம்தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்கோரக்கர் - பொய்யூர்குதம்பை சித்தர் - மாயவரம்இடைக்காடர் - திருவண்ணாமலைசக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக. நலம் பெறுக

சதுரகிரி மலை


சதுரகிரி மலை - சித்தர் பூமிசதுரகிரி மலை, அது இறைவனின் இருப்பிடம். இந்த மலை பல விதமாக அழைக்கப்படுகிறது. சதுராசலம், மகாலிங்கம் மலை, கோரக்கர் மலை, பூலோககைலாயம், தென்கைலாயம், சதுர் வேத கிரி. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து நாலாயிரத்து ஐந்நூறு அடி உயரத்தில் உள்ளது. சரியான பாதை கிடையாது, அடிவாரத்திலிருந்து மலை ஏறுகிற வழி மட்டும் தான்.

மலை ஏறுபவர்கள் பன்னிரண்டு கிலோ மீட்டர் காட்டின் வழியாக நடந்துதான் செல்லவேண்டும். மூன்று இடங்களில் லிங்கம் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது. சித்தர்கள், இன்றும் இம்மலையில் ரூபமாகவும்/அரூபமகவும் தவம் இருப்பதாக கூறுகிறார்கள். ஒரு இடத்தில் இரண்டு லிங்கங்கள், ரெட்டை லிங்கம் என்றழைக்கப்படுகிறது. இங்கு மின்சாரம் இல்லை, தொலைபேசி இல்லை, செல் போன் வசதி இல்லை, கடைகள் இல்லை, ஹோட்டல் இல்லை, தங்குவதற்கு வசதியான இடம் இல்லை. அடிப்படை வசதிகள் மட்டும் சந்தன மகாலிங்கம் சன்னதியில் செய்து தரப்படுகிறது.

மேலும்விவரங்களுக்கு சதுரகிரி.காம் மையத்தை பார்க்கவும்.மகாலிங்கத்திடம் நேரடியாக பேசுகிற வாய்ப்பை நமக்கு அளிக்கும் மலை இது. வாழ்வின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் இடம். ஒருவருக்குதரப்பட்ட விடை இன்னொருவருக்கு தரப்படமாட்டது. ஆதலினால் அவரவர்நேரடியாக சென்று அனுபவங்களை பெற வேண்டும் என்பது முதல் விதி.அனுபவங்களை உணர்ந்திட எந்த பல்கலைகழகத்திற்கும் சென்று பட்ட படிப்பு படிக்க தேவை இல்லை. கொஞ்சம் பொறுமையும், பக்தியும், ஆழ்ந்தநம்பிக்கையும் அவன் மீது வைத்தால் போதும். .ஆசார அனுஷ்டனங்களுக்கு அப்பார்பட்ட இடம். மானசீக பக்தி ஒன்று மட்டும் போதும்.வருக! வந்து அவன் அருள் பெருக!திருச்சிற்றம்பலம்!

சித்தர்கள்


சித்தர்கள் யார்?


"சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள்.சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, மனித சக்திக்கு அப்பார்பட்டு செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை "சித்து விளையாட்டு" என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர்.இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்கிறது.சித்தர்கள் யோகசமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன. அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.


இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே.

அதே போன்று பிரசித்தி பெற்ற திருப்பதி மலை மீது கொங்கணவர் என்ற சித்தர் உள்ளார்.காலத்தை வென்று மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தும், கூடு விட்டு கூடு பாய்ந்தும், மூச்சடக்கி மனித விமானங்களாக வானத்தில் பறந்தும், நவக்கிரகங்களை வசப்படுத்தியும் பலவாராக சாதனைகளைப் புரிந்த சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள், எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும்.


இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன, ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் (materialists) அல்ல, மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது "நிசநிலையை" அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.இவர்கள் இயற்கையோடு இயைந்து அதனைக் கருவியாகப் பயன்படுத்தி பல அற்புதங்களைச் செய்திருக்கிறார்கள்.


வெறும் சித்து விளையாட்டுகளோடு நிற்காமல், யோகம், ஞானம், வைத்தியம் போன்ற பல அரிய விஷயங்களை உலக நன்மைக்காக அருளிச் செய்த சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி. சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம்.


தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும், தமிழ் சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள்.சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள்.


தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.இதை பற்றி அறிந்த, ஆராய்ந்த பலர், சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.இத்தகைய தகவல்கள் மூலம் சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்க முடிகிறது.இன்று,


சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன் ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும் என்பவர்களின் கருத்தும் உண்மையாகிறது.சித்தர்களின் கொள்கை என்பது, பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பதே சித்தர் கொள்கை.


சித்தர்களின் வைத்திய முறைகள் காலம் குறிப்பிட முடியாத பழமையானதாக இருக்கிறது. பண்டைத்தமிழரின் விஞ்ஞான அறிவின் சிகரமே சித்த வைத்தியமாகும் என்று சொல்லப்படுகிறது.மனித குலத்தைக் காக்கும் பொருட்டு, அன்றைய கலாச்சாரத்திற்கேற்பவும், மனித வாழ்க்கை முறைக்கு தேவையான, அனைத்து ஆரோக்கிய முறைகளையும் மிக எளிய வைத்திய முறைகளை, அனைவரும் செய்துகொள்ளும் பொருட்டு தந்தனர். அந்த முறைகளை, அவர்களின் இருப்பிடத்திலே அருகில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு, மனித குலத்தைக் காத்து வந்தனர். மக்கள் அனைவரும், ஒழுக்கந்தவறாமல் வாழவேண்டும் என்றும், பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம், கூடா ஒழுக்கம் உடல் நோயை உண்டாக்கும் என்றும், யோகப்பயிற்சியிலே வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்றும் உடல் வலிமையுடன் நீண்டநாள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர்.


"சித்தர்களில் சிலர் இரும்பைப் பொன்னாக்கும் (ரசவாதம்) வேலைகளில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர் என்றும் இந்த வகையான முயற்சி கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கிலும் நடந்திருக்கின்றது என்றும் சொல்லப்படுகிறது.மருந்துகளில் ரசம் முதன்மையானது. இதன் மூலம் இரசபஸ்பம், ரசசெந்தூரம், ரசக்கட்டு, முதலிய மருந்துகள் தயாரிக்கப்பட்டன. தீராத பல கொடிய நோய்களுக்கு இம்மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ரசவாதம் என்றால் ரசத்தின் மாறுதல்களை அறிவது பொருள்.


போகர் எழுதிய பாடல்கள் வேதியல் தொடர்பான பாடல்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. சித்தர்கள் கண்டறிந்த வாத வித்தையே சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாகும். உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர்.காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்து சித்தர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள்.


நவீன பரிசோதனை சாலைகள் இருக்கவில்லை எனினும் அவர்களின் ஆராய்ச்சிகள் இன்றைய விஞ்ஞான ஆய்வுடன் ஒத்திருப்பதாக சொல்லப்படுகிறது.சித்தர்கள் அவனன்றி ஓரணும் அசையாது என்று நம்பிக்கை உள்ளவர்கள் மக்கள் நூறாண்டுகள் தான் உயிர் வாழமுடியும் என்று நம்புகின்றனர். ஆனால் சித்தர்களின் நம்பிக்கை இதற்கு மாறானது. நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை..


தமிழ்ச் சித்தர்கள்தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர்.இறையுணர்வில் முழுமையடைந்து, உயரிய இறைநிலை எய்திய, மருத்துவம், ரசாயனம், இயற்கை விஞ்ஞானம், தத்துவம் போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கிய அந்த பதினெட்டு மகான்களை, பதினென் சித்தர்கள் என்று அழைக்கிறோம்.எனினும் பிற்காலத்தில் "பல சித்தர்கள் இவர்கள் வழியில் தோன்றினர்" என்றும், "ஒரே சித்தர் பல பெயர்களில் அழைக்கப்பட்டார்" என்றும், "பல சித்தர்கள் ஒரே பெயர்களில் அழைக்கப்பட்டார்" என்றும் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன.இந்தப் பதினெட்டுச் சித்தர்கள் யார், யார்? என்பதில் பலரது கூற்றுக்களில், சில பெயர்கள் மாறுபடுகின்றன.


இதனால் முற்காலத்தில் உயரிய இறைநிலையை எய்தியவர்களின் எண்ணிக்கை பதினெட்டிற்கும் மேற்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்று விளக்கம் தரப்படுகிறது.சித்தர்கள் அனைவருமே, தாம் உயர்நிலை எட்டியது மட்டுமின்றி, உலக மக்கள் நலனுக்காக பல விதங்களிலும், உயரிய நுட்பங்களை வெளிப்படுத்தியதன் மூலமும், தம்முடைய காலத்தில் பிறருக்காக செயல்கள் புரிந்தும், சேவை புரிந்துள்ளனர் என்பதை நம்மால் இத்தகைய கருத்துகளை படிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.


பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான குதம்பைச் சித்தர் ஒரு பெண் என்றும் சொல்லப்படுகிறது.தமிழர்கள் மட்டும் தான் சித்தர்களா என்றால்?பதினென் சித்தர்கள் சமாதி அடைந்த இடங்கள் பெரும்பாலும் இன்றையத் தமிழ்நாட்டில் உள்ளது. சித்தர் பாடல்கள் என்றழைக்கப்படுபவை அனைத்தும் தமிழ் பாடல்களே. ஆனால் இந்தச் சித்தர்கள் அனைவரும் தமிழர்கள் என்று கூறமுடியாது என்ற கருத்தும் பரவலாக உள்ளது.


இவர்கள் எண்ணங்களைக் கடந்த உயர்நிலையை எட்டியவர்கள். மொழி, இன பாகுபாடுகளுக்குள் அடைபடுபவர்கள் அல்ல. இவர்களுடைய ரிஷிமூலமும் அறியப்படவில்லை. மேலும் தங்களுடைய இறையுணர்வால், உலகிலுள்ள எந்த மொழியிலும் உடனடியாக தம் கருத்துக்களை இவர்களால் வெளிப்படுத்த முடியும் என்று சில குறிப்புகள் மூலம் சொல்கிறது, நம்பப்படுகிறது.


உதாரணமாக, போகர் ஜப்பான் மற்றும் சீனாவிற்குச் சென்று அங்குள்ள மக்கள் இறைவன்பால் மனத்தை ஈடுபடுத்தப் பணியாற்றியதாக வரலாறு உண்டு. நான் ஜப்பானில் இருந்த போது அங்கு உள்ள முருகன் கோவிலை பற்றி அறிய முடிந்தது, ஆனால் அது "முருகன் அல்ல போகர்" என்றும்.அவர் பழனியில் மூலவர் சிலை தயார்செய்து கொண்டு இருந்த காலத்தில், தன் சீடரின் ஒரு செய்கையினால் அவர் மீது கோவப்பட்டு காற்றில் நடந்து சென்று, அங்கு ஒரு பெண்ணிடம் வயப்பட்டு குடும்பம் நடத்தியதாகவும், அந்த வழி வந்தவர்கள் தான் ஜப்பானில் இன்றும் "போகர் கொண்டையுடன்"(தளபதி படத்தில் ரஜினி சுந்தரி பாட்டில் வைத்து இருப்பார்)இருப்பதாகவும், இந்தியா வந்தவுடன் அறிந்தேன். ராமதேவர், யாக்கோபு (Jacob) என்ற பெயரில் மெக்காவில் சில வருடங்கள் இறைத் தொண்டு புரிந்ததாகவும் கூறப்படுகிறது. திருமூலர் வடநாட்டிலிருந்து வந்தவர் என்றும் குறிப்புகள் உண்டு. கோரக்கரின் முழுப்பெயர் கோரக்நாத் என்றும், ராமாயணத்தை வட மொழியில் எழுதி உலகிற்கு முதன்முதலில் கொடுத்த வால்மீகியும் சிலர் கூற்றுப்படி பதினென் சித்தர்களில் ஒருவராகிறார்.மேலும் பிறப்பினால் வரும் சாதித் தீட்டுக்கள், சடங்குகள், சிலை வழிபாடு, கோயில் வழிபாடு, போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவற்றில் உள்ள தவறுகள் பற்றி தெளிவான ஆணித்தரமான கருத்துக்களை முதன்முதலில் சித்தர் பாடல்களில் தான் பார்க்கிறோம். இதனாலேயே ஆச்சாரமான இந்துக்கள் சிலர் சித்தர் பாடல்களை ஒதுக்கியதாக சித்தர் வரலாற்றை ஆராய்ந்த ஜ்வெலபில் (Zvelebil) குறிப்பிடுகிறார்.சித்தர் பாடல்களில் இறைவனை உணர்தல் பற்றிய பல விபரங்களைப் பரிபாஷைகளாக (மறைந்திருக்கும் பொருளாக) வைத்துள்ளனர்.
நன்றி : singakkutti.blogspot.com